in

இலங்கை கடற்படையால் தாக்கி இறந்த மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய ஆப்பநாடு மறவர் சங்கம் வெளியிட்ட கண்டன  அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஜூலை 30அன்று  இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கச்சென்ற இராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் மூக்கையா (வயது 54), முத்துமுனியாண்டி (57), மலைச்சாமி (59), ராமச்சந்திரன் (54) ஆகிய நான்கு பேரும் சென்ற விசைப்படகை இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலால் நேருக்கு நேராக இடித்து தாக்குதல் நடத்தியதால் சம்பவ இடத்திலேயே மீனவர்களின் விசைப்படகு மூழ்கியதில் மலைச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். ராமச்சந்திரன் என்பவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா, என்ற தகவலும் அவரது குடும்பத்தாருக்கு கிடைக்கவில்லை.

மூக்கையா மற்றும் முத்துமுனியாண்டி ஆகிய இருவரையும் வலுகட்டாயமாக இலங்கை அரசின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்தை நிகழ்த்தி 2 மீனவர்களின் உயிரை பறித்த இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை ஆப்பநாடு மறவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த சம்பவத்தை நடத்திய இலங்கை கடற்படையினரை மத்திய அரசும், மாநில அரசும், கண்டித்து உரிய நடவடிக்கை எடுத்தும் கைது செய்யப்பட்டுள்ள 2 மீனவர்களை எந்த வித கால தாமதமும் இன்றி உடனே விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த தாக்குதலில் காணாமல் போன மீனவரை இந்திய கடற்படை உதவியுடன் மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த தாக்குதலில் இறந்து போன மீனவ குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ 50 லட்சமும், இறந்த மீனவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழக அரசு வழங்க வேண்டும். இது போன்ற துயர சம்பவத்தை தொடர்ந்து நிகழ்த்தும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை மத்திய அரசும், மாநில அரசும், அடக்கி தமிழக மீனவர்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்த வேண்டும். என ஆப்பநாடு மறவர் சங்கம்  அறிக்கையின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நிலச்சரிவுகள்&வயநாடு பேரிடரிலிருந்து கற்கப்பட வேண்டிய பாடம்

சென்னை, தூத்துக்குடியின் சில பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம்