திண்டுக்கல்:
தமிழகத்தில் அக்னி வெய்யிலில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசிகிறது. இதனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் திண்டுக்கல் நகரில் வாகனம் அதிகம் செல்லக்கூடிய பகுதியில் பொதுமக்களுக்கு இடையுறாக சாலையின் நடுவே வைத்திருந்த 50க்கும் மேற்பட்ட பதாகைகள் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சனாமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் அகற்றினர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings