in

மத்திய அரசு துறைகளில் 2006 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு

சென்னை

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2006 ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஸ்டாக் செலக்சன் கமிஷன் வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் கட்டணம் செலுத்த 18ம் தேதி கடைசி நாளாகும்.

ஆகஸ்ட் 27, 28 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கணினி வழியில் நடத்தப்படும் இந்தத் தேர்வு  அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.

இந்த பணிக்கு 12ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் தகுதியானவர்கள்.

கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வில் வெற்றி பெறுவோர் ஸ்டெனோகிராபி திறன் தேர்வில் பங்கேற்க வேண்டும். இதில் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.

இதில் சி கிரேடு பணிக்கு 18 முதல் 30 வயதுடையவர்களும், கிரேடு டி பணிக்கு 18 முதல் 27 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். அதிகப்பட்ச வயது வரம்பு தளர்வு செய்யப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கு 5 வருடங்கள் வயது தளர்வும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 வருடங்கள் தளர்வும் வழங்கப்படுகிறது.

பார்வையற்றோர், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், காது கேளாதவர்கள், கை கால்களை இழந்தவர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பிரச்சனை உள்ளவர்கள், ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர்கள், கற்றல் குறைபாடு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் http://ssc.gov.in எனும் இணைய தள பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமான ரூ.100 ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அடிப்படை வசதிகள் செய்து தர கோரி ஆட்சியரிடம் மனு

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற டீக்கடைக்காரர்