in

இத படிங்க முதல்ல… பொங்கல் பண்டிகையும்… தெற்கு ரயில்வே அறிவிப்பும்…

சென்னை:

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் தயாராகி வருகின்றனர். சென்னை  மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தங்கி பணியாற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தொடர் விடுமுறை நாட்களை சொந்த ஊரில் கழிக்க ஊருக்கு செல்கின்றனர்.

ஏற்கனவே ரயில் மற்றும் பேருந்துகளில்  அனைத்து இடங்களும் நிரம்பி விட்ட நிலையில், புதிதாக எப்போது சிறப்பு பேருந்து மற்றும் ரயில் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதன் முதல் கட்டமாக திருச்சிக்கு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கும் 18 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. இதன்படி (06190) ரயில் எண்  திருச்சிராப்பள்ளியில் இருந்து தாம்பரத்திற்கு ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18 மற்றும் 19ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது.

இதே போல (ரயில் எண் 06191) தாம்பரத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கும் மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி 9 ரயில் சேவை என இயக்கப்படுகிறது.இந்த ரயிலில் இரண்டு ஏசி வகுப்பு பெட்டியும், 12 உட்கார்ந்து செல்லும் வகையில் சேர்கார் பெட்டியும், இரண்டு சரக்கு வண்டியும் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலானது திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தை சென்று சேர்கிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஆட்டு மந்தையில் பா.ஜ.கவினர் அடைப்பு

சீனாவில் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்… பீதியில் உலக நாடுகள்