in

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!

ராமேஸ்வரம்:

இலங்கை கடற்படையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு நடவடிக்கையைக் கண்டித்தும், கைதான மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் மீனவ சங்க பிரதிநிதி சகாயம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (பிப். 24) முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அடுத்த சில தினங்களில் மாநிலம் தழுவிய மீனவர்கள் போராட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என மீனவ சங்கங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படையைக் கண்டித்து அறிவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது. 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் படகுகளைக் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சிறுமி பலாத்காரம்: போதகர் கைது

பழனி ரயில்வே பெண் போலீசுக்கு ஆய்வாளர் பாலியல் ரீதியாகத் தொல்லை?