புதுடெல்லி
நாடு முழுவதும் நடப்பு கல்வியாண்டுக்கான மருத்துவர் நுழைவுத் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்று அதன் முடிவுகள் வெளியானது. இந்த முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தேர்வெழுதியவர்களில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றிருந்தனர். லட்சக்கணக்கானோர் தேர்வெழுதியதில் 1563 பேருக்கு மட்டுமே தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நாடு முழுவதும் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டிருந்த தேர்வர்களுக்கு ஜூன் 23ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனையடுத்து இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாளை மறுநாள் (8ம் தேதி) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்ததால் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings