புதுடெல்லி:
நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் சீனாவின் திபெத் பகுதியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திபெத்தில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திபெத் – நேபாள எல்லையில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 38 பேர் காயமடைந்துள்ளனர். மேற்கு சீனாவில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, பீகார், அசாம், மேற்கு வங்காள மாநிலங்களிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. டெல்லி – என்.சி.ஆர். மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. பீகார் தலைநகர் பாட்னாவில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings