நாகர்கோவில்:
பிரதமர் நரேந்திர மோடியின் கன்னியாகுமரி வருகையையொட்டி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு போலீசாரின் சோதனைகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதாகவும்,
கன்னியாகுமரியில் சன்னதி தெரு, காந்தி மண்டபம், கடற்கரை சாலை, திரிவேணி சங்கமம் போன்ற அனைத்து சுற்றுலா பகுதிகளில் உள்ள கடைகளை திறப்பதற்கு எந்தவித தடையும் இல்லை எனவும்,
பாதுகாப்பு காரணமாக கடற்கரை ஓரம் உள்ள தங்கும் விடுதிகளில் கடல் பார்த்து அமைக்கப்பட்டுள்ள அறைகளில் மட்டுமே சுற்றுலா பயணிகள் தங்க அனுமதி இல்லை எனவும் கடற்கரை பகுதி, கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்பட எல்லா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி என கன்னியாகுமரி காவல்துறை அறிவித்துள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings