வாரணாசி:
நாடாளுமன்ற தேர்தல் 7கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. மீதம் 3 கட்ட தேர்தல்கள் நடக்க உள்ளது.
இதன் ஒரு பகுதியாக கடைசி மற்றும் 7ம் கட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தொகுதிகளுக்கும் வருகிற ஜூன் 1ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் அவர் 3 வது முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இதற்கான வேட்பு மனுவை இன்று அவர் தாக்கல்செய்தார். அபிஜித் முகூர்த்தம் என்ற அதிதான முகூர்த்தத்தில் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை 4 பேர் முன்மொழிந்து கையெழுத்திட்டனர்.
பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தபோது மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்பட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings