in

சலவைத் துறை பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணி

தூத்துக்குடி:

-தூத்துக்குடி மாநகராட்சி சலவைத் துறை பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன நகர எரிவாய் விநியோகத் திட்டத்தின் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் தூய்மை இந்தியா இரு வார கால அனுசரிப்பை முன்னிட்டு ஜூலை 1ம் தேதி முதல் 15ம்தேதி வரை சுற்றுச்சூழல், சுகாதாரம் தொடர்பாக பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, ஓவியப்போட்டி, விழிப்புணர்வு பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக மையாவாடி அருகே உள்ள தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான சலவைத் துறை பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ்.ஜே.கென்னடி வரவேற்றார்.

மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் தலைமை தாங்கினார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன நகர எரிவாயு விநியோக திட்டத்தின் முதன்மை மேலாளர் என்.ரஞ்சித் குமார், உதவி மேலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். மாநகராட்சி பூங்காவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன நகர எரிவாயு விநியோக திட்டம் சார்பில் 520 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

இதில் தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலர் ஸ்டாலின், பாக்கியநாதன், கவுன்சிலர்கள் கனகராஜ்,, கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ்.பானுமதி நன்றி கூறினார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சென்னை மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு

ரீல்ஸ் எடுக்க சென்ற இளம் பெண் 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பலி