in

பொது இடங்களில் சிலைகள், கொடிகளை வைப்பதை ஏற்க முடியாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டிப்பு!

மதுரை:

மதுரை ஐகோர்ட் கிளையில்அரசியல் பிரமுகர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- திருவாரூர் குடவாசல் சாலை பகுதியில் நாச்சியார் கோவில் குளக்கரை பகுதியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு M. G. R.சிலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சிலையை அகற்ற அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர் என குறிப்பிட்டிருந்தார்

இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களின் தலைவர்களின் சிலைகள், கட்சி கொடிகளை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே? பொது இடங்களில் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. இயக்கமாக இருந்தாலும் சரி. கட்டாயமாக அனுமதிக்க முடியாது.

எனவே இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய நேரிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்ப பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன், 7 திருட்டு வழக்குகளில் மீண்டும் கைது

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிப்பு !