நீலகிரி மாவட்டம்.#.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு போலீசார் வாகன தணிக்கையில் கஞ்சா, தடை செய்யப்பட்ட 570 புகையிலை பாக்கெட், மான்கொம்புகள் கொண்டு வந்த மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எல்லையில் நீலகிரி மாவட்டம் உள்ளது. இதனால் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பயன்பாடு நீலகிரியில் அதிகரித்து வருகிறது. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு நீலகிரி வழியாக கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்திச் செல்லப்படுகிறது.
எனவே நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் இரு சக்கர வாகனத்தில் புகையிலை மற்றும் கஞ்சா கடத்தி வருவதாக குன்னூர் அருவங்காடு சிறப்பு தனிப்பிரிவு போலீசாரான காஜா மைதீனக்கு தகவல் வந்தது. உடனே அருவங்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெய் ரத் தலைமையில் காவலர்களான ராம்குமார், ரத்தின ராஜன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் அவர் கொண்டு வந்த பையில் 570 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இரு சக்கர வாகனத்தை பறிமுதல் மேட்டுப்பாளையம் பகுதி மசூதி தெருவை சேர்ந்த முகமது அனாஸ் (19) என்பவரை பிடித்து விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் அதே பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய மேட்டுப்பாளையம் மசூதி தெரு பகுதியை சேர்ந்த அஜ்மல் தாசீன் வயது (19) மற்றும் கரோலினா பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (23)ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்தனர்.அப்போது அவர்களிடமிருந்து 320 கிராம் கஞ்சா வை பறிமுதல் செய்தனர். மேலும் சந்தோஷ் குமாரின் வீட்டின் சோதனை செய்தததில் அவரின் வீட்டில் மான் கொம்புகள் இருந்ததை கண்டு பிடித்தனர். மேலும் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
வனத்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு ஒருவர் வழங்கியதாக தெரிவித்தார். அவரை பிடிக்க வனத்துறையினர் விரைந்துள்ளனர். மேலும் மான் வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை துவக்கியுள்ளனர்.
மேலும் முகமது அனாஸ், அஜ்மல் தாசீன், சந்தோஷ் குமார் ஆகிய மூவரையும் கைது செய்த அருவங்காடு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.இதில் முகமது அனாஸ் என்ற இளைஞர் நீலகிரி மாவட்டத்திற்கு தடை செய்யப்ப்பட்ட புகையிலை வழங்குவதில் மொத்த வியாபாரியாக இருந்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings