கரூர்
கரூர் அருகே பல வருடங்களாக சாலையை சீரமைக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கரூர் மாவட்டம் தென்னிலை கார்வழி சுமார் 8 கிலோமீட்டர் தார் சாலை கொண்டது
இந்த தார் சாலை கடந்த 2014 ஆம் ஆண்டு போடப்பட்டது. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலையை சீரமைக்காமல் உள்ளது. இந்த சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுகிறதுஇதனால் அடிக்கடி சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்த சாலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாய நிலங்கள் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை அடுத்து பகுதி வாழ் மக்கள் பலமுறை கிராம நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட நிர்வாகம் ஆகியவர்களிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த சாலையை விரைவில் சீரமைக்க கோரி தென்னிலை கார் விழி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் ஆய்வாளர் ஜெகன்நாத் விவசாயிகள் போராட்ட இடத்திற்கு வந்து விவசாயிகள் அனுமதி இல்லை என்று விவசாயிகள் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings