புதுடெல்லி
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய விதர்பா நில பகுதிகளில் நிலவுகிறது. மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 19ம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இதன்காரணமாக மேற்கு திசையில் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையோ மிக கனமழையோ பெய்யக்கூடும். திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கேரளா, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கர்நாடகாவில் ஒருசில பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings