in

ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சியை சிதைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை:

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இது சட்டமாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு நடைமுறைக்கு சாத்தியமற்றதும், இந்தியாவின் பரந்துபட்ட தேர்தல்முறையின் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ளாததும், கூட்டாட்சியை சிதைப்பதும் ஆகும்.

வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடப்பது அந்தந்த மாநிலத்துக்குரிய பிரச்சனைகள். ஆட்சி முன்னுரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாதது.

யதார்த்தத்துக்கு முரணாக அனைத்து மாநில அரசுகளின் ஆட்சிக்காலத்தையும் ஒரே வரிசையில் கொண்டு வருவது என்பது இயல்பாக நடக்கும் அரசு நிர்வாகத்துக்கு இடைஞ்சலை உருவாக்கும்.

இந்த முன்மொழிவு என்பதே மொத்தத்தில் பாஜகவின் ஆணவத்தைத் திருப்திப்படுத்துவதற்கான நகர்வுதானே ஒழிய, இதனை ஒருபோதும் அவர்களால் நடைமுறைப்படுத்த இயலாது. இந்திய ஜனநாயகம் ஒற்றைக் கட்சியின் பேராசைக்கு ஏதுவாக வளைக்கப்படலாகாது.

ஒன்றிய அரசானது இத்தகைய திசைதிருப்பல் உத்திகளில் தனது ஆற்றலை வீணடிப்பதை விட்டுவிட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களைச் சமமாக பகிர்ந்தளித்தல் ஆகிய முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வக்ஃபு வாரிய தலைவராக தேர்வு செய்த முதல்வருக்கு நவாஸ் கனி நன்றி

பத்தே நாளில் உதயநிதி துணை முதல்வராவார்… அமைச்சர் ஆருடம்