ஆசம்கர்:
உத்தரபிரதேச மாநிலம் ஆசம்கர் நகரில் இன்று பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கும் பணிகள் தொடங்கிவிட்டது. மதத்தின் அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள், காங்கிரஸ், சமாஜ்வாடி போன்ற கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொய்களை பரப்பி வருகின்றனர்.
இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தற்போதுகூட மோடி வெளியேறியவுடன் சிஏஏ நீக்கப்படும் என்று பிரசாரம் செய்து வருகின்றனர். குடியுரிமை சட்ட திருத்தத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது. இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் எதிராக செயல்பட வைக்கும் அவர்களின் வாக்கு வங்கி அரசியலை மோடி அம்பலப்படுத்திவிட்டார்.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஸ்ரீநகரில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. எனவே சட்டப்பிரிவு 370ஐ திரும்பக் கொண்டுவர முடியாது என்பதற்கு இதுவே நிரூபணம் என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings