in

சீனாவில் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்… பீதியில் உலக நாடுகள்

பீஜிங்:

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கடைசியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதில் உலகளவில் கோடிக்கணக்கான பேர் உயிரிழந்தனர். இதனால், அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இதில் இருந்து தற்போது தான் பல நாடுகள் மீண்டு வருகின்றன.

இந்நிலையில், சீனாவில் புதிய வைரஸ் ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது.

ஹியூமன் மெடா நிமோ வைரஸ் எச்எம்பிவி ( Human MetaPneumo Virus) என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த வைரஸ், குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகம் தாக்குகிறது. இதனால் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் அந்நாட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வைரஸ் தொற்று நோயாக சீனா சுகாதாரத்துறையினர் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், குளிர்காலங்களில் மூச்சு மற்றும் சளி தொந்தரவுகள் அதிகரிக்கும் என்பதால், அதிகமானோர் மருத்துவமனைகளில் குவிந்து வருவதை கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்எம்பிவி வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் , மூச்சுவிடுவதில் பிரச்னை உள்ளிட்டவை முதலில் ஏற்படும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

தற்போது வரை இந்த வைரஸ் தொற்றுக்கு  எந்த சிகிச்சையும்,தடுப்பூசிகளும் கிடையாது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இத படிங்க முதல்ல… பொங்கல் பண்டிகையும்… தெற்கு ரயில்வே அறிவிப்பும்…

மகிழ்ச்சி செய்தி… தங்கம் விலை குறைந்தது