நியூயார்க்
சுனாமி, மழை வெள்ளம் போல் மக்களின் இயல்பையே புரட்டிப்போட வைத்தது தான் கொரோனா. கடந்த 2019ம் ஆண்டு உலக நாடுகளை அச்சுறுத்தியது. இந்த வைரசுக்கு இறப்பு எண்ணிக்கை ஒரு கோடியை கடந்தது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவித்தனர். 2021ம் ஆண்டு வரை இந்த கொரோனா தாக்கம் நீடித்தது.
கொரோனாவில் இருந்து விடுபட்டுவிட்டோம் என்று மக்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் XEC variant என்கிற புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.
அதாவது கிட்டத்தட்ட பிரிட்டன், ஜெர்மனி, டென்ம்ர்க், அமெரிக்கா, நெதர்லாந்து, போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுக்கல் உள்பட 27 நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை கொரோனா ஜெர்மனில் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதிய கொரோனாவின் தாக்கம் புதிய அலையை உருவாக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்த கொரோனா தாக்குதல் ஏற்பட்டால் காய்ச்சல், தொண்டை வலி, தொடர் இருமல், வாசனை நுகர்வை இழத்தல், உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings