in

நீட் தோ்வு குளறுபடி – மாணவா்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை: கனிமொழி எம்பி

தூத்துக்குடி

நீட் தோ்வு குளறுபடிகள் காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாணவா்-மாணவிகளுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும் என மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் நீட் தோ்வு வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்ட மாணவா்-மாணவிகளுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும். மகளிா் உரிமை தொகை விடுபட்டவா்களுக்கு வழங்குவதற்கான பணி விரைவில் தொடங்கப்பட்டு, அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்திற்கு, மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து துறை அமைச்சா் மற்றும் பிரதமரிடம் மக்களவையில் குரல் எழுப்பி கோரிக்கை வைப்போம். தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தரமறுப்பது, வஞ்சிக்கும் செயலாகும். மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், வெள்ள பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வந்துள்ளது என்றாா்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தூத்துக்குடியில் 3 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து

திருவள்ளூர் நகரில் 15ம் தேதி மின்சாரம் தடைபடும் இடங்கள்