in ,

மாநில உரிமைகளுக்கு நீட் தேர்வு எதிரானது – த.வெ.க. தலைவர் விஜய் ( நிகழ்ச்சி வீடியோ)

சென்னை

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த 28ம் தேதி திருவான்மியூரில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் வழங்கினார்.

முதல்கட்டமாக நடைபெற்ற இந்த நிலையிர் கோவை, ஈரோடு, மதுரை உள்பட 21 மாவட்டங்களை சேர்ந்த  மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

2ம் கட்ட நிகழ்ச்சி

இந்தநிலையில் இன்று 2ம் கட்டமாக கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களை கட்சியின் தலைவர் வழங்கினார். இதற்காக அவர் காலையிலேயே மாணவர்கள் வருகை தந்துகொண்டிருக்கும்போதே வந்துவிட்டார்.

மேடையில் ஒளித்த பாடல்

விஜய் மேடை ஏறும்போது “ஆளப்போறான் தமிழன்” என்கிற பாடல் ஒளித்தது. இந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் விஜய் பேசுகையில், நீட் தேர்வு பல மாணவ, மாணவிகளை பாதிப்படையச் செய்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றவாறு பாடத்திட்டங்கள் அமைய வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு கோரும் தீர்மானத்தை வரவேற்கிறேன்.

நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது

1975ம் ஆண்டுக்கு முன்னர் கல்வி என்பது மாநில பட்டியலில் தான் இருந்தது. அதன் பிறகுதான் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரானது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. மாநில கல்வியில் பயின்றுவிட்டு தேசிய கல்வியில் தேர்வு எழுத சொல்வது அநீதி. எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் கல்லூரிகளுக்கு வேண்டுமானால் நீட் தேர்வு நடத்திக் கொள்ளலாம். நீட் தேர்வு வேண்டாம் என்பதே எனது பரிந்துரை என்று நீட் தொடர்பாக ஆழமாக பேசினார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மக்களவையில் பிரதமர் பேசும்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளி

பலி எண்ணிக்கை 122ஆக உயர்வு: மத சொற்பொழிவுக்கு முறையான பாதுகாப்பு செய்யாதது ஏன்?