சென்னை
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் இன்று அதிகாலை காலமானார்.
பெங்களூருவில் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் இன்று பிற்பகல் சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு வந்து பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings