நீலகிரி
நீலகிரி மாவட்டம் எல்லநள்ளி பகுதி கெக்கட்டி பழைய அருவங்காடு செல்லும் சாலையானது 30 அடி கொண்ட சாலையாகும் ஆனால் இங்கு இருபுறமும் வாகனங்கள் நிற்பதாலும், சில வாகனங்களை அங்கேயே நிறுத்தி விடுவதாலும் அப்பகுதியில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சில சமயங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவ்வழியே வந்த அரசாங்க வாகனம் திடீரென பழுதடைந்த நிலையில் உள்ளேயும் வர முடியாமல் வெளியேயும் செல்ல முடியாமல் திணறிய நிலையில் பெரும் பரபரப்பும் வாகனங்கள் செல்ல முடியாமல் மிகுந்த நெரிசலும் காணப்பட்டது.
ஆதலால் அங்கு நிற்கும் வாகனங்களை அப்புறபடுத்தி இருபுறமும் வாகனங்கள் நிற்காது வண்ணம் அவ்வழியே செல்லும் வாகனங்கள் எந்த ஒரு இடையூறு இல்லாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் படி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதனை பற்றி ஏற்கனவே பத்திரிகைகளில் செய்திகள் வெளியிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியம் அளிக்கிறது.
ஆதலால் மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு மக்கள் பிரச்சினை சரி செய்து தர வேண்டும் என்று அங்குள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings