அமராவதி:
ஆந்திர மாநிலம் அருகே பெற்ற மகனைத் தாயே வெட்டிக் கொன்று உடலை 5 துண்டுகளாக வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கம்பம் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி தேவி(57 ). லட்சுமிக்கு ஷியாம் பிரசாத் என்ற 35 வயது மகன் உள்ளார். ஷியாம் பிரசாந்த் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், ஷியாம் தன்னுடைய சித்தி, பெரியம்மா, அத்தை என பல்வேறு உறவினர்களிடம் ஷியாம் பிரசாந்த் மிகவும் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனால் ஷியாமை கொலை செய்யத் திட்டம் போட்டுள்ளார் தாய்.
இதைத்தொடர்ந்து, லட்சுமி தேவி தனது மகனை நேற்று முன்தினம் இரவு கோடாரியால் வெட்டி துடிக்கத் துடிக்க கொலை செய்துள்ளார். பின்னர், தனது உறவினர்களுடன் சேர்ந்து ஷியாமின் உடலை ஐந்து துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டை கொண்டு கட்டியுள்ளார். பின்னர், அந்த உடலின் பாகங்களைக் கிராமத்தின் அருகில் உள்ள ஏரியில் வீசியுள்ளார்.
பெற்ற மகனைக் கொன்றுவிட்டு லட்சுமி தேவி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings