சென்னை:
குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கு சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015-ல் தொடரப்பட்ட பொதுநல வழக்கை வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து 2016 முதல் விசாரித்து வந்தது. தாதுமணல் எடுக்க 7 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகக் கடந்த ஆண்டு தொழில் துறை பதில் மனுத் தாக்கல் செய்தது. சட்டவிரோதமாகத் தாது மணல் எடுப்பதாக வந்த புகாரை அடுத்து 2013ல் தடை விதிப்பு என உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்தது. தடைக்கு முன்பும், தடைக்கு பிறகும் சட்டவிரோதமாகத் தாது மணல் எடுத்ததால் ஏற்பட்ட ரூ.5,832 கோடி இழப்பு ஏற்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தென்மாவட்ட கடலோரப் பகுதிகளில் விதிகளை மீறி தாதுமணல் அள்ளிய புகார்களை சிபிஐ விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 7 நிறுவனங்களுக்கு எதிரான புகாரில், சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த அறிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.தாது மணல் சுரங்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும். மோனோசைட் தாது பிரித்தெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் செல்லும். இதில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் குறித்தும் விசாரிக்க வேண்டும். பதுக்கி வைக்கப்பட்டுள்ள மணலை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தனியார் நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் உரிமைத் தொகை ரூ.5,832 கோடியை நிறுவனங்களிடம் வசூலிக்க வேண்டும். சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாதுமணலை உடனடியாக ஒன்றிய அரசிடம் ஒப்படைக்க அனுமதி வழங்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட தாதுமணலுக்கான தொகை மற்றும் உரிமத்தொகை தொகையைத் தனியார் நிறுவனங்களிடம் வசூலிக்க வேண்டும். ரூ.1000 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு என்பதால் அந்நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
in குற்றம்
தாது மணல் கொள்ளை வழக்கு : சிபிஐ-க்கு மாற்றம்

GIPHY App Key not set. Please check settings