in

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை

சென்னை:

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவ கல்லூர் மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை கொருக்குப்பேட்டை கே.கே.நகரை சேர்ந்தவர் தனுஷ் (வயது23). இவர் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

இந்தநிலையில் தனது தந்தையிடம் இவர் ரூ.24 ஆயிரம் கேட்டுள்ளதாகவும், ஆனால் 4 ஆயிரம் மட்டும் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பணத்தை பெற்றுக்கொண்ட தனுஷ், தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளார். வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த தனுஷின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் தனுஷ் வீட்டிற்கு வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டனர். இதையடுத்து தனுஷ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரம்மி மோகத்தல் மருத்துவ மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வைகை அணையில் நீர் திறப்பு: 4 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

குடியுரிமை சட்ட திருத்தத்தை யாராலும் ரத்துசெய்ய முடியாது:பிரதமர்