சென்னை,
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 6-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நிலையில், 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக மார்ச் மாதம் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சபாநாயகர் மு.அப்பாவு வெளியிட்டார்.அன்று காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுவார். அவரது உரை சுமார் 1½ மணி நேரம் இடம்பெறும் என்று தெரிகிறது.
இந்த பட்ஜெட்டில் மக்களைக் கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் பல இடம்பெறும் என்று தெரிகிறது.மார்ச் 15-ந் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 2021-ம் ஆண்டு தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், 5-வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது.இந்த பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார்.
GIPHY App Key not set. Please check settings