ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதில் படைவீரர்கள் உட்பட 9 பேர் வீர மரணம் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியான குத்ருவில் ஐ.இ.டி குண்டுவெடிப்பு மூலம் மாவோயிஸ்ட்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினர் வாகனம் தகர்க்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பலியானவர்கள் எட்டு பேர் தண்டேவாடா டிஆர்ஜி படை வீரர்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் உள்பட 9 பேர் என தெரியவந்துள்ளது.
தண்டேவாடா, நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் கூட்டு நடவடிக்கை ரோந்து சென்றுவிட்டு வரும் போது இந்தசம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக பஸ்தார் மண்டல ஐஜி சுந்தர்ராஜ் தெரிவிக்கையில், குத்ரு பெத்ரே சாலையில் வெடிகுண்டு பயன்படுத்தி மாவோயிஸ்டுகள் படை வீரர்கள் வாகனத்தை வெடிக்கச் செய்தனர்.
இந்த ஆண்டின் முதல் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை சனிக்கிழமையன்று அபுஜ்மத் நகரில் நடத்திவிட்டுத் திரும்பும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. மீண்டும் ஜனவரி 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்நடவடிக்கை தொடங்கியது. தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளை தேடும்பணி முழுவீச்சில் நடக்கிறது என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings