சென்னை
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில்பேசிய சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, சர்ச்சைக்குரிய வகையில் பாவ புண்ணியம், மறுபிறவி என்று மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசினார். இதனை கேட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர் பொங்கி எழுந்தார். அவரை மகாவிஷ்ணு மரியாதை குறைவாக பேசினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யாராக இருந்தாலும் விடமாட்மோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
இந்தலையில் ஆஸ்திரேலியாவிற்கு மகாவிஷ்ணு தப்பியோடியதாக கூறப்பட்டது. அவர் ஒரு பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தான் அதில், நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. ஓடி ஒளியும் வகையில் நான் என்ன தறவான கருத்தை சொல்லிவிட்டேன். சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் என் மீது மாற்றுத்திறனாளிகள் பலர் புகார் கொடுத்துள்ளார்கள். நான் தமிழகத்தில் இருக்க வேண்டும். நான் பேசியதற்கான விளக்கத்தை கொடுக்க நான் தயாராக உள்ளேன். இன்று மதியம் 1.10 மணியளவில் சென்னை விமான நிலையம் வருவேன் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் சென்னை விமான நிலையம் வந்த மகாவிஷ்ணுவை போலீசார் அதிரடியாக கைது செய்தர். அவரை அடையாறு காவல் துணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings