in

இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வுமண்டலம்: மழைக்கு வாய்ப்பு

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை மத்திய மேற்கு மற்றும் அடதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்திற்கு கிழக்கே 280 கிலோ மீட்டர், ஒடிசா மாநில கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா, மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்ற மாலையோ அல்லது இரவுக்குள்ளோ அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை பூரி (ஒடிசா) மற்றும் தீகா (மேற்கு வங்காளம்) இடையே கடக்கக் கூடும்.

இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அத்துடன் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று அறிவித்துள்ளது.

இதனால் சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குன்னூர் பாய்ஸ் கம்பெனி ஆரோக்கியமாதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய விநாயகர் சிலைகள்