in

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை உணவகம் திறப்பு!

சென்னை:
சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை உணவகமான உதான் யாத்ரி கபே திட்டத்தை ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தா விமான நிலையத்தில் முதலில் தொடங்கப்பட்டது. இப்போது 2-வதாக சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் காபி, டீ 10 ரூபாய், தண்ணீர் பாட்டில் ரூ.10, சமோசா ரூ.20, இனிப்பு ரூ.20 என்று விற்பனை செய்யப்படுகிறது.
பின்னர் ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாடு முழுவதும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் விமானச் சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் உதான் விமானச் சேவை தொடங்கப்பட்டது. இப்போது இந்தியா முழுவதும் 619 வழித்தடங்களில் உதான் விமானச் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் 1.57 கோடி மக்கள் பயணிக்கின்றனர்‌.இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் நான்காவது பெரிய விமான நிலையமாகச் சென்னை விளங்குகிறது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சென்னையில் 15 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்!

மின்வேலியில் சிக்கி பள்ளி மாணவன் பலி