குஜராத்:
குஜராத் மாநிலம் பாவ்நகர்-சோம்நாத் நெடுஞ்சாலையில் சிங்கம் ஒன்று ஒய்யாரமாக உலா சென்றது. சிங்கம் நெடுஞ்சாலையை கடந்த போது கார், பைக் உட்பட வாகனங்களில் வந்த மக்கள் மரண பயத்தில் அப்படியே உறைந்து போயினர். வாகனங்கள் சில நிமிடங்கள் நின்று சென்றன.
நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த சிங்கம் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. ஆசிய வகையை சேர்ந்த இந்த சிங்கங்கள் குஜராத்தின் கிர் காட்டுப்பகுதியில் அதிகம் காணப்படும்.
GIPHY App Key not set. Please check settings