ஆலந்தூர்
ஆலந்தூர் நீதிமன்றம் ஆலந்தூர் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சட்ட அறிவு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் ரோட்ராக் கிளப் & குடிமக்கள் நுகர்வோர் கிளப் மற்றும் கலாம் உதவி கரங்கள் இணைந்து நடத்தியது. இந்தக் கருத்தரங்கு சென்னை மீனம்பாக்கம் பகுதியில் உள்ள A.M.ஜெயின் கல்லூரியில் நடைபெற்றது.
புனித தோமையார் மலை காவல் உதவி ஆணையர் A.முரளி தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இந்தக் கருத்தரங்கிற்கு வருகை தந்த உதவி ஆணையர் A.முரளி மற்றும் அரசு வழக்கறிஞர் சம்பத்குமாருக்கு கல்லூரி முதல்வர் B.மகாவீர் பொன்னாடை போத்தி வரவேற்றார்.
கருத்தரங்கில் வழக்கறிஞர்கள் பிரபாகரன், ரமேஷ் பாபு, கலாம் உதவும் கரங்கள் நிர்வாகி ஜான்சன், அப்பாவு, MSME இயக்குனர் சுரேஷ் பாபுஜி, கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் மாணவ மாணவிகளிடையே பேசிய அரசு வழக்கறிஞர் சம்பத் குமார், இளம் தலைமுறை மாணவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் எடுத்து வாழ்க்கையில் வெற்றி பெற்று சாதனையாளர்களாக மாறி பெற்றோருக்கு நற்பெயரை வாங்கிக் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்,.

மேலும் செல் போனில் சமூக வலைதளங்களில் மூழ்கி, ஆன்லைன் சூதாட்ட வலைதளங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். சட்ட அறிவை வளர்த்துக் கொண்டும் சட்ட விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஒவ்வொரு மாணவ மாணவிகளும் அனைத்து மாவட்டங்களில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் இலவச சட்டப் பணிகள் ஆணையத்தை தொடர்பு கொண்டு சட்டம் சம்பந்தமான சேவையை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்தக் கருத்தரங்க சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்த M.சங்கர சுப்பிரமணியன் இளநிலை நிர்வாக உதவியாளர் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதில் பெண்களுக்கான பாதுகாப்பு உதவி எண் 1090 என்ற கை பிரதி வழங்கப்பட்டது. 31.7.24 அன்று நங்கநல்லூரில் நடைபெற்ற குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட மாணவ மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தக் கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவருக்கும் ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் Y.ஜான் இளவரசு நன்றி தெரிவித்தார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings