in

குண்டுகுளம் சிவகாளி அம்மன், அழகுத்தாய் அம்மன் கோயில் ஆடிவிழா

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள குண்டுகுளம் கிராமத்தில் சிவகாளி அம்மன், அழகுத்தாய் அம்மன் கோயில் கடைசி அடி திருவிழா கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு சிவகாளி அம்மன், அழகுத்தாய்  அம்மன் கோயில் கடைசி ஆடி உற்சவ விழாவின் ஆடி ஒன்றாம் தேதி முதல் கிராமத்தில் காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிவகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். இதை தொடர்ந்து கூல் பிரசாதம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தினந்தோறும் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கும்மி பாடல், அம்மன் பக்தி பாடல்களை பாடி வழிபட்டார்கள். ஆகஸ்ட் 12 ம் தேதி திங்கட்கிழமை இரவு ஆன்மீக அன்பர்களால் இளஞ்செம்பூர்  மகாலட்சுமி குழுவினரின் பக்தி பாடல் கச்சேரி நடைபெற்றது, 13ம் தேதி செவ்வாய்க்கிழமை கிராம தேவதை ஸ்ரீ சிவகாளியம்மன் அம்மனுக்கு 108 பால்குடம், அக்னி சட்டி, திருமுடி காணிக்கை போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  பால்குடம் விநாயகர் கோவிலில் தொடங்கி பசும்பொன் தேவர் சிலை வழியாக ஊர்காவலன் கோயில் வரை ஊர்வலமாக சென்று மீண்டும் கிராமத்தின் முக்கிய வீதி வழியாக அம்மன் ஆலயத்திற்கு வந்து  அம்மனுக்கு பால் அபிஷேகம்,  சிறப்பு  அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

காப்பு கட்டி விரதம் இருந்தவர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினார்கள், அனைவருக்கும் பொது அன்னதானம் நடைபெற்றது. 14ம் தேதி புதன்கிழமை காலை அழகுத்தாய் அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு, திருமுடி காணிக்கை, சிதறு தேங்காய் உடைத்தல், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அன்று மாலை கிராமம் முழுவதும் ஒவ்வொரு வீடுகளிலும் நாட்டு கோழி அடித்தும், குத்தரிசி அதிரசம் பலகாரம் செய்தும், புத்தாடை எடுத்து அன்று இரவு 7 மணி அளவில் அம்மனுக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி சமைத்து, படையல் படைத்து, மல்லிகை பூ, அத்த பலகாரம், தேங்காய் உடைத்து, கிடாய் வெட்டியும் அம்மன் கோயிலுக்கு முன்பாக  சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வழிபாட்டில் கமுதி, சாயல்குடி, முதுகுளத்தூர், கடலாடி, மதுரை, சென்னை ஆகிய பகுதியில் இருந்து பொதுமக்களும், பெண்களும் அதிகளவில் கலந்து கொண்டார்கள்.

தினந்தோறும் நாடகங்கள், கலைநிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்ந்து இரண்டு நாட்கள் மாபெரும் கபாடி போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கபாடி அணியினர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்கப்பணம் மற்றும் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் குண்டுகுளம் கிராம  பொதுமக்கள் மற்றும்  இளைஞர்கள்  சிறப்பாக செய்திருந்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சிறுவயதில் சமூக சேவையாற்றும் சிறுவனுக்கு பாராட்டு சான்றிதழ்

திணைக்காத்தான்வயல் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் நிழற் குடை அமையுமா?