in

போக்குவரத்து சிக்னல்களில் நிழற்குடை: வாகனஓட்டிகள் மகிழ்ச்சி

கரூர்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தநிலையில் வாகன ஓட்டிகளின் நலன் கருதி கரூர் ரவுண்டானா போக்குவரத்து சிக்னல் மற்றும் சுங்க கேட் பகுதியில் தகரத்தினால் ஆன நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.  

நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் சிக்னல் சிறிது நேரம் விழும் பொழுது வாகன ஓட்டிகள் காத்திருக்கும் வகையில் அனைவரும் சற்று மன நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் கரூர் மாநகராட்சி சார்பில் பல பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் உள்ள இடங்களில் தகரத்தினால் ஆன நிழல் கொடை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

தலையங்கம்