in

தீபாவளியை முன்னிட்டு கரூர் கோ ஆப்டெக்ஸ் 30% தள்ளுபடி விற்பனை

கரூர்

கரூர் ஆசாத் ரோடு நகராட்சி வளாகத்தில் இயங்கி வரும் கோ ஆப் டெக்ஸின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழாவினை கரூர் மாவட்ட ஆட்சியர் மி. தங்கவேல் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து முதல் வாடிக்கையாளராக பட்டுப் புடவை வாங்கிக் கொண்டார்.

இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ ஆப்டேட்ஸ் நிறுவனம் 1935 முதல் தொடங்கப்பட்டு 89 ஆண்டுகளாக தமிழக அரசு கைத்தறி நெசவாளர்கள் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்குவதற்காக விழாக் காலங்களில் 30 சதவீதம் வரை அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கிய வருகிறது.அதனை தொடர்ந்து இந்த வருடத்திற்கான விழாக்கால விற்பனை தொடங்கப்பட்டது.

தீபாவளி பண்டிகைக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விற்பனை நிலையத்திற்கு 6 லட்சம் வரை விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி ரகங்களான குல்ட் மெத்தைகள், டேபிள் மேட், க்ரீன் துணிகள், ஒரிஜினல் இலவம்பஞ்சினால் ஆன மெத்தைகள், தலையணைகள், பிரிண்டர் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணைகள் உரையுடன் கூடிய படுக்கை விரிப்பு ரகங்கள் விற்பனைக்கு உள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி இயங்கி வரும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கியது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களில் விற்பனை நிலையம் செயல்படும். இந்த நிகழ்வில் கோ ஆப் டெக்ஸ் மண்டல மேலாளர் சு. காங்கேயவேலு மேலாளர் (இரகம் மற்றும் பகிர்மானம்) எம். பாலசுப்பிரமணியன், கரூர் விற்பனை நிலைய மேலாளர் கதிர்வேல் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

திருவாடானை மழை முத்துமாரியம்மன் கோயில் பால்குட திருவிழா

பெட்ரோல் பங்க்குகளில் மறைமுகமாக கூடுதல் பணம் வசூல்