சென்னை:
பிஎஸ்எல்வி -சி60 ராக்கெட் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் முக்கியமாக ‘சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான காம்பாக்ட் ரிசர்ச் மாட்யூலும் (CROPS) அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சிறய வகை பயிர் விதைகளும் வைத்து அனுப்பப்பட்டிருந்தது. விண்வெளியில் பயிர்களை வளர்க்க முடியுமா? என்பதை கண்டுபிடிக்கவே இந்த ஆய்வு மாட்யூல் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு முன்னர் பல நாடுகள், விண்வெளியில் தாவரத்தை வளர வைத்து காட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்தியா சொந்தமாக இதுபோன்ற சோதனையை செய்தது கிடையாது.
அந்த வகையில் CROPS தான் முதல் சோதனை. இஸ்ரோ அனுப்பி வைத்த மாட்யூலில், சிறிய பயிர்களின் விதை, அது முளைக்க தேவையான மண், ஹெர்மெட்டிலி சீல் செய்யப்பட்ட யூனிட், வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் வாயு பரிமாற்றத்தை அளிவிட சென்சார்கள், பூஜ்ஜிய ஈர்ப்பு விசைக்கு ஏற்ற ஹைட்ரோபோனிக் அமைப்புகள், விதைக்கு தேவையான நீர் மற்றும் ஊட்டச்சத்தை கொடுக்க தானியங்கி அமைப்பு, விதையின் வளர்ச்சியை கண்காணிக்க உயர்திறன் கொண்ட கேமரா, விதை செடியாக முளைத்தால் அதை அளவிட ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் ஆகியவை பொறுத்தப்பட்டிருந்தன.
இவ்வளவும் சேர்த்து அனுப்பி வைக்கப்பட்ட விதை தற்போது முளைத்திருக்கிறது. இதற்கான ஆதாரமாக புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது. வரும் நாட்களில் விதை நன்கு வளர்ந்து இலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings