புதுடெல்லி:
கொரோனா தொற்று நாடுமுழுவதும் பரவி ஏராளமான பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய நிலையில் வெளிநாட்டு மருந்தான கோவீசீல்டு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலத்தப்பட்டது. இதனால் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக எழுந்த விவகாரத்தில் இது உண்மை என்பது நிரூபனமானது. இந்தநிலையில் தொற்றுக்கான மற்றொரு தடுப்பூசியான இந்திய தயாரிப்பு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய 30 சதவீத பேர் பக்கவிளைவுகளை சந்திப்பதாக பனாரஸ் பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், ‘கோவிட் தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களில் 30 சதவீதம் பேருக்கு தோல் நோய், சதைப்பிடிப்பு, நரம்பியல் பாதிப்பு, உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டது.
இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி பனாரஸ் பல்கலைக்கழகத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவாக்சின் பக்க விளைவுகள் பற்றிய பனாரஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்விற்கு தங்களிடம் எந்தவித ஒப்புதலும் பெறவில்லை.
கோவாக்சின் “பாதுகாப்பு பகுப்பாய்வை” முன்வைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த மோசமாக வடிவமைக்கப்பட்ட ஆய்விற்கு, தங்களுடன் தொடர்பு கொள்ள முடியாது.
முறையாக ஆய்வு நடத்தாமல், பக்க விளைவு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. ஆய்வின் முடிவை திரும்ப பெற வேண்டும். ஆய்வை திரும்ப பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings