in

சவுக்கு சங்கர் மீதான நடவடிக்கைக்கு இடைக்கால தடை

புதுடெல்லி

யூடியூப் சேனல் வைத்திருந்தவர் சவுக்கு சங்கர். இவர் மீது பெண் போலீசை அவதூறாக பேசியது. கஞ்சா வைத்திருந்தது. என 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஆனாலும் தேனி போலீசார் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சந்திசூட் அமர்வு நடத்திய விசாரணையை தொடர்ந்து 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் புதிய குண்டர் சட்ட வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 16 வழக்குகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கீழக்கரையில் இலவச கண் மருத்துவ முகாம்

பேருந்து கட்டணம் உயர்கிறதா? இதோ விளக்கம்