in

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

பென்னாகரம்

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது

தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்துள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து 3 ஆயிரத்து 463 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.நேற்று மாலை 3 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு4000 கன அடி தண்ணீர் வந்தது.

இதனால் மெயின் அருவி, ஐந்தருவி சினிபால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் நீர் வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தமிழ்நாடு அரசு விளையாட்டு பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஆம்ஸ்ட்ராங் உடலை ஆம்புலன்சில் இருந்து இறக்கி மீண்டும் போராட்டம்