ராமநாதபுரம்
ராமநாதபுரம் கோ ஆஃடெக்ஸ் ஷோருமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழாவும் தொடங்கியுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ், என அனைவரும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு தொடர்ந்து 89 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம் திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சி காட்டன், செட்டிநாடு காட்டன், கோவை கோரா காட்டன். சேலம் காட்டன், பரமக்குடி காட்டன், திண்டுக்கல் காட்டன் மற்றும் அருப்புகோட்டை காட்டன் சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.
மேலும் நவீனயுக ஆடவர்களை கவரும் விதமாக காட்டன் சட்டை ரகங்கள் / பருத்தி (Linen/Cotton) சட்டைகள், லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மகளிருக்காக சுடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் கோ-ஆப்டெக்ஸ் ஷோரூமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். 30 சதவீத தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழாவும் நடைபெற்றது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings