சென்னை
சென்னை துரைப்பாக்கத்தை அடுத்த மேட்டுக்குப்பம் குமரன் குடிலில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் மர்ம நபர் ஒருவர் சூட்கேஸ் ஒன்றை வீசிச்சென்றுள்ளார். இந்த சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் வந்த போலீசார் சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேசில் வைத்தது தெரியவந்தது. ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். அங்குள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தனர்.

முதல் கட்டமாக கொலை செய்யப்பட்ட பெண், மணலி பகுதியை சேர்ந்த தீபா (வயது 31) என்பது தெரியவந்தது. இவர் 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாகவும் தற்போது கொலை செய்து சூட்கேசில் அடைத்து வைத்ததாக கூறப்பட்ட நிலையில், தீபா திருமணம் ஆகாத பெண் என்பதும், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகவும், இடைத்தரகர் மூலமாக பாலியல் தொழிலுக்கு துரைப்பாக்கம் வந்ததாக கூறப்படுகிறது.
சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு இந்த கொலை தொடர்பாக குமரன் குடில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 25) என்பதும், நேற்று இரவு பாலியல் தொழிலில் ஈடுபடும் தீபாவை புரோக்கர் மூலம இவர் வரவழைத்ததாகவும், பின்னர் பணம் கொடுப்பதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தீபாவை கொலை செய்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings