*நீலகிரியில் குறிப்பிட்டவர்களுக்கு கட்டுமான பணிக்கு எளிதாக அனுமதி சாமானியர்களுக்கு இல்லைகட்டுமான பணிகளுக்காக விண்ணப்பித்த 8132 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன குன்னூர் நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்*
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுமான பணிகளுக்காக விண்ணப்பித்த 8132 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் தடையின்றி கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரி குன்னூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் குன்னூர் நகர மன்றத்தின் மாதாந்திர கூட்டம் தலைவர் சுசிலா, துணை தலைவர் வாசீம் ராஜா,ஆணையாளர் இளம்பருதி ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது.
25வது வார்டு உறுப்பினர் ஜாகீர் உசேன் பேசுகையில் “மாவட்ட நிர்வாகம் சார்பில் மலை மாவட்டங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டதாக கூறி கடந்த 3 ஆண்டுகளாக மாவட்டம் முழுவதும் தற்போது வரை 8132 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. மேலும் வசதி படைத்த குறிப்பிட்ட நபர்கள் விரைவில் எளிதாக அனுமதி கிடைத்து விடுகிறது.இந்த திட்டத்தால் பெரும்பாலும் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கட்டிடங்கள் கட்டுவதற்கு முறையான அனுமதி வழங்கினால், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீர் வரி மூலமாக கூடுதல் லாபம் கிடைக்கும்” மேலும் தேயிலைக்கு அடுத்து கட்டுமான தொழில் உள்ளது தற்போது தேயிலைக்கும் விலை இல்லை கட்டுமான தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை.மற்றும் பழைய முறை போல நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து கட்டிடம் கட்ட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசியதையடுத்து,இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உள்ளாட்சி முரசு நாளிதழ். நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர். A.ஜான்டிசோசா(டானியல்). 8870917777
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings