in

பெண்களுக்கு அரணாக இருப்பேன்: தவெக தலைவர் விஜய்

சென்னை:

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக கவர்னரை சந்திக்க உள்ள நிலையில் பெண்களுக்காக விஜய் கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என் அருமை தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும், வேதனைக்கும் ஆளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும், எந்த பயனும் இல்லை என்பது தெரிந்ததே, அதற்காகவே கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும், அரணாகவும்.

எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இன்று கவர்னரை சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்

பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்: கவர்னரிடம் விஜய் வலியுறுத்தல்