in

கோவில் சொத்துக்களை பாதுகாக்க கோரி 21ம் தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சென்னை

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது

தமிழகத்தில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான கோவில்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அந்த கோவில்களுக்கு பல லட்சம் நிலங்கள், இடங்கள், வீடுகள் உள்ளன.

கோவில்களின் வருமானம், கோவில் சொத்துக்களை பாதுகாக்க பராமரிக்க மட்டுமே தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது இந்து சமய அறநிலையத்துறை.

கடந்த சுமார் 75 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகின்ற திராவிட அரசியல்வாதிகளால் பத்தாயிரம் கோவில்களும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் அழிக்கப்பட்டோ அல்லது காணாமலோ போனதாக இந்து சமய அறநிலையத் துறை ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.

மேலும் இந்து கோவில்களின் சொத்துக்களை பொது பயன்பாட்டிற்கு என கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நல துறைக்கு என பலவகையில் கோவில் சொத்துக்களை அரசு தனது கைவசம் கொண்டுள்ளது.கோவில் சொத்துக்களுக்கு உரிய இழப்பீடோ வாடகையோ தருவதில்லை.

அதேசமயம் அரசு நிலங்களை விட அதிகமான நிலங்களை கிறித்துவ மத ஸ்தாபனங்கள் தான் வைத்து உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு அங்குல நிலத்தை கூட பொது பயன்பாட்டிற்கு அரசு கையகப்படுத்தியது உண்டா? அதேபோல் மசூதிகளில் சொத்தாக கருதப்படும் வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க அரசு தமிழர்களின் வரிப்பணத்தில் இருந்து அள்ளி கொடுத்து முஸ்லிம்களை கொண்டே நிர்வாகம் செய்ய வைக்கிறது.

ஒருபுறம் இந்து கோவில்களின் சொத்துக்களை அரசாங்கம் திட்டமிட்டு சூறையாடுகிறது. மறுபுறம் ஆக்கிரமித்து கோவில் நிலங்கள் காணாமல் போக அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணை போகின்றன.பிரம்மாண்டமான கோவிலை நிர்மாணித்த நமது முன்னோர்கள் அதனை நிர்வகிக்க பாதுகாக்க பல கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை இறைவன் பேரில் எழுதி வைத்துள்ளனர்.

நீதிமன்றமும் கோவில் சொத்துக்கள் கோவில் பயன்பாட்டுக்காக தான். அதனை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துவது கூடாது என கூறியே வந்துள்ளது.

எனவே கோவில் சொத்துக்களை பாதுகாக்க தவறும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். கோவில் சொத்துக்களை பாதுகாக்க கடுமையான சட்ட நடைமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது.

கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி பக்தர்களை ஒன்றிணைத்து வருகின்ற 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இதற்கு தமிழக மக்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வால்பாறை செக் அணை நிரம்பியது

மொழி அரசியல் எடுபடாது என்பதை உணர்ந்துள்ளதா கர்நாடகா?