சென்னை
சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் தலை நகரங்களில் தேசியக் கொடி ஏந்தி இருசக்கரவான பேரணி நடத்தப்படும் என்று தமிழக பாஜக அறிவித்திருந்தது. இந்த பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது.
இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்க தொடர்ந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஜெயச்சந்திரன், காவல்துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று நடத்த வழக்கு விசாரணையில் சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் பாஜக இருசக்கர வாகன பேரணி நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings