in

பேச்சாளர் மகாவிஷ்ணுவிடமிருந்து ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல்

திருப்பூர்

சென்னை அசோக்நகர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பரம்பொருள் பவுண்டேஷனை சேர்ந்த பேச்சாளர் மகாவிஷ்ணு, முன் ஜென்மத்தில் செய்த பாவங்களால் தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத்திறனாளிகளாகவும், ஏழைகளாகவும் பிறக்கிறார்கள் என்றார். அவரது இந்த பேச்சு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அவர் மீது மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்திருந்தனர்.

இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டு கடந்த 7ம் தேதி சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் சென்னை சைதாப்பேட்டை உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மகாவிஷ்ணுவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை காவல்துறை சைதாப்பேட்டை நீதிமன்றத்தல் மனு தாக்கல் செய்த நிலையில் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க 4வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுப்பிரமணியம் நேற்று அனுமதி அளித்தார்.

அதன்படி மகாவிஷ்ணு சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் இன்று திருப்பூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். திருப்பூரில் உள்ள மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில் மகாவிஷ்ணுவிடம் இருந்த ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவரது பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பயணிகளுக்கு நற்செய்தி: கிளாம்பாக்கத்திற்கு வருகிறது ரயில்நிலையம்

பல ஆண்களை மணந்து ஏமாற்றிய கல்யாண ராணிக்கு ஜாமீன்