in

மின் விளக்குகளால் மிளிரும் மண்டபம் – ராமேஸ்வரம் புதிய பாலம்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடல் பகுதியை இணைக்கக் கூடிய பழைய ரயில்வே தூக்கு பாலம் கடந்த 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு நூற்றாண்டுக்கு மேல் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மண்டபம் ராமேஸ்வரம் ரயில் சேவை நிறுத்தப்பட்டு புதிய ரயில்வே தானியங்கி பாலம் பணிகள் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது முழுமையாக முடிவடைந்துவிட்டது. இதையடுத்து ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ஆய்வு பணிகள் நிறைவடைந்தது.

இந்நிலையில் அக்டோபர் மாதம் 2ம் தேதி திறக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 திறப்பு விழாவிற்காகக காத்திருக்கும் ரயில்வே புதிய தானியங்கி தூக்குப்பாலம் மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்கிறது. இதனை அவ்வழியாக சாலை பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

பூமியை சுற்றும் புதிய சின்ன நிலவு கண்டுபிடிப்பு