புதுடெல்லி:
ஆன்ட்ராய்டு போன்களில் தகவல்களை ஹேக்கர்கள் திருடுவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் இணையப் பாதுகாப்பு நிறுவனமான இந்திய கணினி அவசர நிலைப் பதிலளிப்புக் குழு ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் பல பிதிப்புகளைப் பாதிக்கும் அபாயகரமான பாதிப்புகள் குறித்து உயர் தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அதாவது ஆன்ட்ராய்டு போன்களில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளாவிட்டால் ஹேக்கர்கள் செல்போன் தகவல்களை திடுடக்கூடும். செல்போன் அல்லது டேப்லெட்டில் உள்ள தகவல்கள் திருடுபோகும். உள்நுழைவுச் சான்றுகள், நிதித் தகவல்கள், இணையத்தில் உலாவிய தன் வரலாறு போன்ற தனிப்பட்ட தரவுகள் இதில் அடங்கும்.
ஹேக்கர்கள் செல்போன் அல்லது டேப்லெட்டின் செயல்பாட்டை ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கவும் செய்யலாம். மோசமான சூழ்நிலையில் இந்த பாதிப்புகளை பயன்படுத்திக் கொள்வது, ஆன்ட்ராய்டு சாதனத்தை பயன்படுத்த முடியாததாக மாற்றலாம்.
குறிப்பாக ஆன்ட்ராய்டு 12, ஆன்ட்ராய்டு 12எல், ஆன்ட்ராய்டு 13, ஆன்ட்ராய்டு 14 ஆகியவை அடங்கும். முடிந்தவரை ஆன்ட்ராய்டின் சமீபத்திய பதிப்பை புதுப்பிக்குமாறு அனைத்து பயனர்களையும் ஊக்குவிக்கிறோம் என்று தனது அதிகாரப்பூர்வ குறிப்பில் கூகுள் தெரிவித்துள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings