in

அரசு கொறடா கா.ராமச்சந்திரன் காயமடைந்தவர்களை நேரில் சந்திப்பு.

*குன்னூர் மலைப்பாதையில் நேற்று அரசு பேருந்து கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தவர்களை மருத்து மனையில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமப்பகுதிகளுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.இந்த நிலையில் நேற்று உட்லாண்ஸ் கிராமத்திலிருந்து 41 பயணிகளை ஏற்றி கொண்டு,அரசு பேருந்து ஒன்று குன்னூரை நோக்கி வந்தது.காட்டேரி பகுதியில் முன்னே சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்லும் போது எதிர் பாராத விதமாக ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் உள்ள  கம்பத்தின் மீது மோதி 20 அடி உயர பள்ளத்தில் நின்றது. பேருந்தில் உள்ள பயணிகள் அலறி அடித்து கூச்சலிட்டனர். இருப்பினும் பேருந்தில் பயணித்த பயணிகள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இதன் சம்பவம் அறிந்த குன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின் பலத்த காயமடைந்த ஓட்டுநர் உட்பட 9 பயணிகளை மீட்டு, குன்னூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் குன்னூர்  அரசு மருத்துவமனையில்  அனுமதிக்க பட்டிருந்தவர்களை தமிழக அரசின் தலைமை கொறாடா கா.ராமச்சந்திரன் காயம் அடைந்தவர்களிடம் உடல் நலம் விசாரித்தார். மேலும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம்  கேட்டறிந்தார் மற்றும் லாலி மருத்துவமனை முற்றிலும் ஆய்வு செய்து மருத்துவமனைக்கு எதாவது தேவைகள் இருந்தால் கூறும் படிக்கும் தமிழக அரசு மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நல்ல முறையில் செய்து வருகிறதாகவும் ஆதலால் மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து தரும் என்று கூறினார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு

CFLU யூனியன் சார்பாக வரவேற்பு