in

தாம்பரத்தில் கஞ்சா விற்றவன் கைது: போலீசாரிடம் சவால்

தாம்பரம்

சமீப காலமாக தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா நடமாட்டமோ விற்பனையோ அடியோடு இருக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையர் அபின் தினேஷ் மோடக், கூடுதல் போலீஸ் கமிஷனர் சி. மகேஸ்வரி ஆகியோர் நேரடி மேற்பார்வையில் தாம்பரம் பள்ளிக்கரணை துணை ஆணையர்கள் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் ஆகியோரது முன்னிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார், மகளிர் போலீசார், துப்பாக்கி ஏந்திய நிலையில் குடியிருப்பு பகுதிகள், தங்கும் விடுதிகளில் 500 இடங்களில் கஞ்சா வேட்டை நடத்தினர்.

இந்த சோதனையில் இரண்டரை கிலோ கஞ்சா, 4 கத்திகள், ஹுக்கா தூள், 6 கிலோ ஹுக்கா மிஷின், ஏழு புகை பிடிக்கும் பானை, 1. பாங், 5 கஞ்சா எண்ணெய் 20 மில்லி லிட்டர், கஞ்சா சாக்லேட் 6 பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா கடத்தலின் தாதா செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, நந்திவரத்தை சேர்ந்த செல்வமணி (வயது 29) போலீசார் கைது செய்ய முயன்றனர்.

அப்போது என்னை ஒன்றும் செய்ய முடியாது. இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் தப்பி வந்து விடுவேன். என்கிட்ட பணம் நிறைய இருக்கு. ஐகோர்ட்டில் எனக்கு நிறைய ஆட்கள் இருக்கின்றனர். பணக்கட்டை தூக்கி போட்டுவிட்டு வெளியே வந்து விடுவேன் என கொக்கரித்தான். அப்போது அவனை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்: பிரதமர் தொடங்கி வைத்தார்

பெண்களின் பாதுகாப்பின் மீது திடீர் கவலை அதிகரிப்பு